”இங்கு
சுள்ளி திருடியவனை
சந்தனம் திருடியவன்
சவுக்கால் அடிக்கிறான்”
என்று யார் எழுதியது என்று தெரியவில்லை. 40 வருடங்களாயிற்று படித்தது
காவல்நிலையங்களில் வழுக்கி விழுந்து கைகால் உடையும் இத்தனை இளைஞர்கள்
லாக் அப்பில் மரணமடையும் இத்தனை இளைஞர்கள்
இந்தக் கணக்குகளில் வராமல் சித்தரவதைக்கப்படும் இத்தனை இளைஞர்கள்
இவர்கள்மீது சுமத்தப்படும் திருட்டுதொகையின் மொத்தமே அதிகபட்சம் 50 கோடிதான் என்றும்
ஆனால் ஆன்லைன் திருட்டு என்பது குறைந்தபட்சத் தொகை குறைந்தபட்சம் 1,800 கோடி என்றும்
திருபுவனம் அஜித் கொலைகளை ஒட்டி ஒரு நேர்காணலில் ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி ராஜாராம் கூறுகிறார்
நாம் எப்போது அந்த 1,800 கோடி குறித்து மக்கள் புரிந்துகொள்கிறமாதிரி பேசப்போகிறோம்
#சாமங்கவிய 32 நிமிடங்கள்
05.07.2025
Published on July 06, 2025 00:06