இந்தியச் சூழலில் இன்று இரண்டு வகையில் சிதைவுற்றிருப்பது ஆசிரியர் மாணவர் என்னும் உறவு. ஒருபக்கம் அதை ஒருவகையான மதவழிபாடு போல ஆக்கி அர்த்தமிழக்கச் செய்துள்ளனர். இன்னொரு பக்கம் எவரிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளாமலிருப்பதே தன்னடையாளம் என்னும் அபத்தத்தை பகுத்தறிவு என நிறுவியிருக்கின்றனர். உலகில் எங்கும் கல்வியும் கலைகளும் ஒரு மனிதரிடமிருந்தே இன்னொரு மனிதருக்குச் செல்லமுடியும் என்பது நிறுவப்பட்டுள்ளது. குறிப்பாக மேலைநாட்டுக் கல்விநிலையங்கள் மிகச்சிறந்த ஆசிரிய மாணவ உறவை உருவாக்கும்பொருட்டு கட்டமைக்கப்பட்டவை. நமக்கு கல்விநிலையங்களில் ஆசிரியர் அமைய வாய்ப்பே இல்லை என்னும் நிலை. ஆசிரியர் யார், எப்படி நம்மை அவர் அடைகிறார்?
Published on June 28, 2025 09:19