அன்புள்ள ஜெ,
ஜூன் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் சந்தப்பாடல்கள் குறித்து ‘பொருளின்மையின் துள்ளல்’ என்ற கட்டுரையை தாமரைக்கண்ணன் எழுதியுள்ளார். க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக ‘எது இலக்கியம்’ என்ற விமர்சனக் கட்டுரை வெளிவந்துள்ளது. கமலதேவி சுகந்தி சுப்ரமணியன் கவிதைக் குறித்து ‘மொழி கைவிடாத இருள்’ என்ற தலைப்பில் வாசிப்பனுபவம் எழுதியுள்ளார். தேவதேவனின் கவிதையின் மதம் கட்டுரை தொகுப்பின் ஒரு பகுதியான ‘குழந்தைமையும் மேதைமையும்’ என்ற கட்டுரையுடன், சில தமிழ் கவிதைகள் பகுதியில் விக்ரமாதித்யனின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
https://www.kavithaigal.in/
நன்றி
ஆசிரியர் குழு
(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)
Published on June 18, 2025 11:32