நான் செல்லுமிடங்களில் எல்லாம், தங்கள் குழந்தைகள் பற்றிய பதற்றத்தை பெற்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் அந்த பதற்றக்குரல் மிகுதி. நம் குழந்தைகளில் மிகப்பெரும்பாலானவை பெற்றோரும் சமூகமும் வகுத்தளித்த பாதையில் சீராக சென்று அவர்கள் நிறைவுகொள்ளும் இடங்களில் அமர்ந்துகொள்பவைதான். அவற்றைப் பற்றியும் பெற்றோர் பதற்றம் கொள்கிறார்கள். ஆனால் அந்த பாதையில் செல்லாமல் தங்களுக்கான பாதைகளில் முட்டிமோதும் குழந்தைகளின் பெற்றோர் தீராத அச்சத்தில் தத்தளிக்கிறார்கள். அவர்களுக்காக சில சொற்கள்.
Published on May 06, 2025 11:36