அண்மையில் ஒரு நாத்திகப்பேச்சாளரான ஒரு பெண்மணி ஒரு காணொளியில் பேசியதை கேட்டேன். “உலகத்தில் எல்லாருமே நாத்திகர்கள்தான்” என்றார். உரையாடியவர் அதிர “வீட்டுக்கு பூட்டும் தாழும் போடும் அனைவருமே நாத்திகர்கள்தான்” என்றார். சிரிப்பு.
பெரும்பாலும் இங்கே நாத்திகவாதம் இப்படித்தான் உள்ளது. இதை பாமர நாத்திகவாதம் எனலாம். இது பாமர ஆத்திகத்தை நோக்கிப் பேசுகிறது. ஆனால் மேலான அறிவுத்தளத்தில் செயல்படும் ஆத்திகமும் அதை அந்த தளத்தில் எதிர்கொள்ளும் ஆத்திகமும் உண்டு.
Published on April 20, 2025 11:36