அன்புள்ள ஜெ,
ஏப்ரல் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக உலக இலக்கியம் சார்ந்த போன கட்டுரையின் தொடர்ச்சியாக ‘கவிதை – இந்திய, உலக இலக்கிய போக்குகள் – 2’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. ‘கவிதையில் சொல்லாட்சிகள்’ என்ற தலைப்பில் மதார் ஓசூர் கவிதை முகாமில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமும், கமலதேவி இசை கவிதை குறித்து எழுதிய ரசனை குறிப்பும், தேவி.க.பொன்முகலி கவிதை குறித்து எழுதிய ரசனை குறிப்பும், பிரமிளின் ‘வடக்குவாசல்’ கவிதையும் இடம்பெற்றுள்ளன.
https://www.kavithaigal.in/
நன்றி,
ஆசிரியர் குழு
(மதார், நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.)
Published on April 16, 2025 11:31