அறிதலின் வெளி…
அன்புள்ள ஜெ
தங்கள் நலம் அறிய விழைகிறேன்.
எனது வெண்முரசு வாசிப்பு இப்போது சற்று வேகம் அடைந்துவிட்டது . வெய்யோன் நாவல் முடித்து இப்போது பன்னிரு படைக்களம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது நாவலும் என்னை ஏதோ ஒரு புது உயரத்திற்கு கொண்டு செல்வதாக உணர்கிறேன். முதற்கனல் வாசிக்கும் போது உங்களை பற்றி பெரிதாக ஏதும் அறியாமல் வாசிக்க ஆரம்பித்தேன். என் வாசிப்பு விரிய விரிய நான் ஏதோ ஒரு மிகப்பெரிய மலையின் முன் நிற்பதாக உணர்கிறேன்.
உண்மையில் வெண்முரசு என் வாழ்வில் நடத்திய மாற்றங்கள் எண்ணற்றவை. என் மொழி செம்மை அடைந்துள்ளது. என் சிந்தனை சீராகியுள்ளது. என் பார்வை பரந்துள்ளது. என் வானம் விரிந்துவிட்டது. என் இலக்கு தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டது.
ஒரு தலைசிறந்த இலக்கியம் ஒருவரின் வாழ்க்கையை எந்த அளவு மாற்றும் என்று நான் என்னைக்கொண்டே அளந்து கொள்கிறேன். இனிமேல் என் வாழ்வில் வசந்தம் தான் என்று நான் சொல்ல வரவில்லை. எத்தனை தடங்கல் வந்தாலும் என்னால் அதை தாண்டி உள வேகத்தோடு செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதை அடைந்ததில் வெண்முரசுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
இன்னும் நான் வெகு தூரம் செல்ல விழைகிறேன். அடுத்து அடுத்து என் வாசிப்பை உங்களிடம் பகிர்வேன்.
பின்குறிப்பு : வெண்முரசு தான் எனக்கு தத்துவத்தில் பெரு விளைவை தந்தது. இந்திய தருவதில் மூன்று வகுப்புகள் முடித்துவிட்டேன். நான்காம் வகுப்புக்கு விண்ணப்பித்தும்விட்டேன்.
நன்றி
சரவணன்
https://youtu.be/jimQp2Fp_gM?list=PLoiiNMLQqet1ccRHxIumSd5tCQx1Qo8dr
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887)
மாமனிதர்களின் உருக்கு உலை இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்விJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

