சந்திரநிலம்- கடிதம்
சந்திரனைப் பூசிகொண்ட நிலம்
அன்புள்ள ஜெ
சந்திரனை பூசிக்கொண்ட நிலம் பாடலை இன்று காலையில் கேட்டேன். எழுந்து இரண்டு தமிழ் விக்கி பதிவுகள் போட்டு விட்டு குளிப்பதற்கு முன்னர் கேட்பது இனிமையாக இருக்கிறது. முழு நிலவில் காயலில் சென்ற படி கேட்பதாக கற்பனை செய்து கொண்டேன். நன்றாக இருக்கும். உங்களுக்கு அப்படியான சமயம் அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.
இப்பாடல் முடிந்து வருகையில் விசித்திரவீரியன் தீர்க்கசியாமர் வாயிலாக சந்தனு கதையினை கேட்கும் பகுதி நினைவுக்கு வந்தது. ஆனால் என் மனதில் அத்தியாயங்கள் முன்பின்னாக மாற்றி அடுக்கப்பட்டிருப்பதை, அத்தியாயங்களை தேடி எடுத்து வாசிக்கையில் உணர்ந்து கொண்டேன். தீர்க்கசியாமர் சொல்வது சந்தனுவும் கங்கையும் இணையும் கதை. என் மனதில் சந்தனு – சத்யவான் – சத்யவதி – கங்கை – விசித்திரவீரியன் என அனைவரும் ஒன்றாகி சத்யவதி யமுனையில் நின்றபடி நிலவை காணும் ஓவியம் மனதில் தோன்றியது. இரண்டு அத்தியாயங்களில் விசித்திரவீரியன் வரும் 18 ஆம் அத்தியாயத்தின் தொந்தரவு உள்ளாக்குவது. ஒருவகையில் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைத்து கொள்வதால் நிகழ்வது. என்றேனும் விசித்திரவீரியனை போலவே எல்லாவற்றிலிருந்தும் விடுபடுவேன் என்றால் பேறு பெற்றவனான்.
இங்கே ஆசைதீர காதலித்து மறைந்தவர் உண்டா ? தெரியவில்லை, இருக்கலாம் இல்லாமலிருக்கலாம்.
அன்புடன்
சக்திவேல்
பி.கு:
முதற்கனல் 7
https://venmurasu.in/mutharkanal/chapter-7
முதற்கனல் 18
https://venmurasu.in/mutharkanal/chapter-18
நேரமுள்ள போது வாசித்து பாருங்கள். அண்மையில் ஸ்டேட்டஸில் வெண்முரசின் வரிகளை வைத்திருந்ததை பார்த்தோம். வியப்பாக இருந்தது. நம் நவீன இலக்கிய ஆசிரியர்கள் யாரும் தாங்களே முற்றிலும் அன்னியமாகி நின்று வியந்து நிற்கும் பெரும் படைப்புகளை எழுதியவர்கள் அல்ல. ஏதோ ஒரு நுனி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

