நாங்கள் மார்த்தாண்டம் ‘ஏரியா’க்காரர்கள். எங்கள் மொழி தமிழர், மலையாளிகள் இரு சாராரையுமே திகைக்கச் செய்வது. மையநிலத் தமிழை தெலுங்கு ஊடுருவல் அழித்தது. மலையாளத்தை சம்ஸ்கிருதம் ஒரு ஸ்குரூ போல ஆக்கிவிட்டது. நாங்கள் பேசுவதே செந்தமிழ்.
ஆகவே எங்கு போனாலும் எங்களை கேலி செய்கிறார்கள். ஆனால் அந்தக் கேலியால் தாழ்வுணர்ச்சி அடைவது எங்கள் இயல்பு அல்ல. எங்கள் பிரச்சினை மேலுணர்ச்சி. ஆகவே நாங்கள் பிறரை கேலி செய்து வென்று மேலே செல்வோம். இந்தியாவில் எங்கானாலும் மார்த்தாண்டம் வட்டாரர்களுக்கு அவர்களின் தொழிலில் தனித்தேர்ச்சி இருக்கும், பெரும்பாலும் செயல்வீரர்கள், வெற்றியாளர்கள்.
அந்த ‘மார்த்தாண்டம் ஆட்டிடியூட்’ அற்புதமாக வந்த வீடியோ இது. ஒரெ ஒரு திருத்தம், மார்த்தாண்டம் அல்ல- மாற்த்தாண்ண்டம்.
Published on April 02, 2025 11:31