கைகளை வீசி 

01

அழுகையை நிறுத்தி

உறக்கத்தில் புன்னகைக்கிறது

கைகளை வீசி

கால்களை உதைத்து

நெடுந்தூரம் வந்தடைந்த

இளைப்பாறலின் மூச்சொலியோடு

படுக்கையில் புரள்கிறது.

சிறகு முளைத்த பதற்றத்தில்

எழுந்து பறக்கும்

வண்ணத்துப்பூச்சியை

அழைத்து வந்த

கனவின் பூந்தோட்டத்தில்

தாயின் முலை தேடி

ஊர்கிறது

பூ.

 

02

தெய்வம் உண்டோ சொல்

தெய்வம் உண்டோ சொல்

சொல்லில் உண்டே தெய்வம்

சொல்லில் உண்டு  தெய்வம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post கைகளை வீசி  first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2025 09:25
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.