புத்தகத் திருவிழா – நன்றி

சென்னை புத்தகத் திருவிழா இனிதே நிறைவடைந்தது. நிறைய வாசகர்கள், நண்பர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. பலரும் புத்தகங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது, என் சார்பிலும் தேசாந்திரி பதிப்பகம் சார்பிலும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி,

இந்தக் கண்காட்சியினுள் ஆறு புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். அங்கே இளம் படைப்பாளிகள் பலரையும் சந்திக்க முடிந்தது சந்தோஷமளித்தது.

வெளியூர்களில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் என்னைச் சந்திக்க வந்திருந்த வாசர்களின் அன்பு நிகரற்றது. அவர்களுக்கு நன்றி.

ஸ்ருதி டிவி அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து காணொளியாக வெளியிட்டார்கள். கபிலன், சுரேஷ் மற்றும் ஸ்ருதி டிவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றி

தி இந்து தமிழ்திசை நாளிதழ், தினமணி, மற்றும் தொலைக்காட்சி, இணைய இதழ்கள். யூடியூப்பர்கள், முகநூல் பதிவர்கள் எனப் பலரும் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2025 22:06
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.