பப்பற வீட்டிருந்துணர
அன்புமிக்க எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்களுக்கு!
இன்றைக்கு தமிழ்நாட்டில் சைவம் என்றால் என்ன என்று யாரிடமாவது கேட்டால் புகழ் பெற்ற சைவ உணவங்களின் பெயரைச் சொல்லி புகழ் பாடுவார்கள். சைவம் என்பது ஒரு சமயம் என்ற புரிதல் கூட இல்லாமல் தான் பலர் இருக்கிறார்கள். அப்படியே சைவ சமயத்தை பற்றி தமிழகத்தில் தெரிந்திருந்தாலும் அதில் உள்ள சித்தாந்தத்தை அறியும் முனைப்புடன் இன்றைய தலைமுறையினர் யாருமே இல்லை. நீங்கள் ஈழத்துச் சைவர்.
அங்கு பள்ளிப்பாடத்திலேயே சைவநெறி உள்ளது. சிறு வயதினிலேயே பதி, பசு, பாசம் என்பணவரடர் இருந்து வந்தவர். அங்கே தமிழகம் போல் அல்லாமல் பாடத்திலே சைவ சமயம் உள்ளது. எனவே பதி பசு பாசம் என்பவனற்றை பள்ளிச் சிறுவர்களே பரவலாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இங்கே, இப்படி குறை கூறுவதனால் ஒரு பயனும் இல்லை. என்ன பங்காற்றப் போகிறோம். அதே நேரத்தில் அதன் மூலமாக அறிவார்ந்த தளத்தில் நாமும் எப்படி வளரப் போகிறோம் என்று யோசனையின் விழைவாக ” சித்தாந்தம்” என்ற இணைய இதழை இத்தருணத்தில் தொடங்குகிறோம்.
இது முழுக்க முழுக்க சைவ சித்தாந்தத்தின் அனைத்து அடிப்படைக் கூறுகளையும் அறிமுகப்படுத்த இருக்கின்றன.
தொடர் கட்டுரைகள், நேர்காணல்கள், சிந்தாந்த அறிஞர்கள் பற்றின முழுமையான அறிமுகங்கள், முக்கிய சித்தாந்த நூல்களை நவீன மொழிநடைக்கு மறு ஆக்கம் செய்தல் என்று செயல்கள் பலவாறாக திட்டமிடப்பட்டிருக்கின்றன. இது ஏதோ சமய மத பிரச்சார நோக்கத்திற்கான இதழ் அல்ல.
தமிழ்நாட்டில் தோன்றிய ஆழமான செறிவான முக்கிய தத்துவம் ஒன்று அருகி வரும் நிலையில், அதனைத் தடுத்து இளம் தலைமுறைக்கு கையளிக்க வேண்டும் என்ற கடப்பாடோடு இந்த இதழைத் தொடங்குகிறோம்.
இந்த இதழை நல் முறையில் அ.வே. சாந்திகுமாரசுவாமிகள் அவர்களின் திருக்கரங்கள் மூலம் திறந்து வைத்துள்ளார் . மேலும் இவ்விதழை நடத்த நல்லூழ் அமைய வேண்டும். பல்லோர் துணைபுரிய வேண்டும். பப்பற வீட்டிருந்துணர வேண்டும்.
இப்படிக்கு
இதழ் ஆசிரியர்கள்
உ.முத்துமாணிக்கம்
செ.பவித்ரா
The post பப்பற வீட்டிருந்துணர first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

