2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதியின் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

பாரதி, புதுமைப்பித்தன், வஉசி என அவரது அரிய பதிப்புப் பணிகள் மற்றும் ஆய்வுகள் சிறப்பானவை. சங்க கவிதைகளைத் தங்கப்பாவுடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறந்த வரலாற்று அறிஞர். தமிழ் பதிப்பு வரலாற்றை ஆய்வு செய்து புதிய வெளிச்சத்தைக் காட்டியவர். அவர் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
Published on December 18, 2024 20:31