தமிழில் பொதுவாசகர்களின் இலக்கிய ரசனைக்குரிய ஊடகமாக வானொலி உருவாகி வந்த காலகட்டத்தில் இலக்கியத்தை அதில் நிகழ்த்திய முன்னோடிகளில் ஒருவர் டி.என். சுகி சுப்ரமணியன். மரபிலக்கிய ரசனையையும் வானொலி வழியாக உருவாக்கியவர். எளிய இதழியல் கட்டுரைகள் வழியாக இலக்கியம் சிந்தனைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்தவர். பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் எழுதியுள்ளார்.
டி.என்.சுகி சுப்ரமணியன்
Published on November 06, 2024 10:33