கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள்

கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள்

சிறில் அலெக்ஸ் நடத்தும் கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள் இரண்டுமுறை நிகழ்ந்துள்ளன. கிறிஸ்தவம் பற்றி நமக்குத்தெரிந்திருப்பது கொஞ்சம். முறையான அறிமுகம் நமக்கு மிகப்பெரிய ஆன்மிக வெளிப்பாடாக அமையும். நம் மதங்களை நாமே மேலும் அறியவும் உதவும்.

வெறும் தத்துவ- ஆன்மிக அறிமுகங்கள் அல்ல இவை. ஒருபக்கம் இவை மத்திய ஆசிய- ஐரோப்பிய வரலாற்றின் அறிமுகம். இன்னொருபக்கம் ஐரோப்பிய சிந்தனை மரபின் அறிமுகம். ஐரோப்பாவை அதன் பண்பாட்டுப்பின்புலத்துடன் அறிந்துகொள்ளவும் இவை மிக உதவியானவை.

இன்றைய நவீன மேலைநாட்டுப் பண்பாட்டை, அதன் வெளிப்பாடான நவீன சினிமாவையும் இலக்கியத்தையும் இந்த அறிமுகம் இல்லாத ஒருவர் புரிந்துகொள்ள முடியாது.

டிசம்பர் 6,7 மற்றும் டிசம்பர் 8

விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com பைபிள், கடிதங்கள் பைபிளின் மெய்யியல் – கடிதம் கிறிஸ்தவ மெய்யியல் – கடிதம்  பைபிள் கற்பவர் எவர்? கிறிஸ்தவ ஆன்மிகம், தத்துவம், வரலாறு – அறிமுக வகுப்புகள் பைபிளை அறிதல், கடிதம் பைபிளை அறிதல், கடிதம் பைபிளை அறிதல்… கடிதம் ஜெபமோகன்?

 

  அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை

 

நிஷா மன்ஸூர் ஏற்கனவே நடத்திய இஸ்லாமிய தத்துவம்- சூஃபி மரபு அறிமுகம் ஓர் மகத்தான அனுபவமாக அமைந்தது என்று பங்கேற்றோர் கூறினார்கள். குறிப்பாக இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமின் வரலாறு, அதன் ஆன்மிகமையம் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இஸ்லாமை மட்டும் அல்ல ஆன்மிகம், கலை ஆகிய அனுபவங்களையே முற்றிலும் புதிய ஒளியில் பார்க்கச்செய்த மாபெரும் தொடக்கமாக அது அமைந்தது என்றனர்.

இஸ்லாமிய- சூபி தத்துவம் இந்திய கலைமரபை, இந்திய இசைமரபை அறிந்துகொள்பவர்கள் தவிர்க்கவே முடியாத ஒன்று. இந்திய வரலாற்றையும் தமிழ் வரலாற்றையும் அறியமுனைபவர்கள் அறிந்தாகவேண்டியது. ஆனால் மிகக்குறைவாகவே தமிழர்கள் இஸ்லாமிய தத்துவத்தை அறிந்துள்ளனர். இது அவ்வாறு அறிவதற்கான அறிவார்ந்த ஒரு வாய்ப்பு.

ஆன்மிக சாதகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆன்மிகத்தின் அல்லது யோகத்தின் எந்த ஒரு வழியை பின்பற்றுபவர்கள் என்றாலும் இஸ்லாமிய மெய்யியல் – ஆன்மிக அறிவு என்பது அவர்களின் ஞானத்தை துலங்கச்செய்வதைக் காண்பார்கள். அதை இந்திய மெய்ஞானியர் கபீர் முதல் குருநானக் வரை, ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நித்ய சைதன்ய யதி வரை கூறியுமுள்ளனர்

மீண்டும் இஸ்லாமிய- சூபி தத்துவ அமர்வுகள் நவம்பர் 22, 23 மற்றும் 24 அன்று நிகழும்.

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்

இஸ்லாம், கடிதம் இஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம் இஸ்லாம், கடிதம் இஸ்லாமிய அறிமுகம், கடிதம் இஸ்லாமிய ஞானம்- கடிதம் இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

 

இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய உளவியல் சவால் என்பது கவனசசிதறலை வென்று நம் உள்ளத்தைக் குவிப்பதுதான். மாபெரும் ஊடகப்பெருக்கம் இன்று  நம்மை விளம்பரங்களாக, கேளிக்கையாக, சூதாடடமாக சிதறடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான பூராடடமாகவே நம் வாழ்க்கை மாறியுள்ளது. உலகமெங்கும் இன்று ஆசியாவின் தியானமும் யோகமும் பெற்றுள்ள பெரும் புகழ்  இதனால்தான்.

தில் லை செந்திலப்பிரபு அவர்கள் கற்பிக்கும் இந்த கவனக்குவிப்பு- தியான முறை இன்றைய நவீன மனிதனுக்காக பண்டைய யோகமுறைகளையும் தியான முறைகளையும் சில ஹடயோக முறைகளையும் காலத்து உருவாக்கப்பட்ட்து எளிமையான பயிற்சிகள் வழியாக உளக்குவிப்பை பயிற்றுவிக்கிறார்.

1970 களில் உருவாக்கி உலகமெங்கும் சென்று வெற்றிபெற்ற இம்முறை இன்று தொடர்சசியான ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்களின் வாழ்க்கை சார்ந்த எதிர்வினைகள் வழியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கடைப்பிடிப்பதற்கு எளியதும்கூட.

தில்லை செந்திலப்பிரபு அவர்கள் நவீன யோக- தியான முறைகளில் முப்பத்தைந்து ஆண்டுக்கால பயிற்சியும் அனுபவமும் கொண்டவர்.

நாள் நவம்பர் 29, 30 டிசம்பர் 1

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 

வரவிருக்கும் நிகழ்வுகள்

 

வைணவ இலக்கிய அறிமுகம்

வைணவ பக்தி இலக்கிய அறிமுகம் ஜா.ராஜகோபாலன் மீண்டும் நடத்துகிறார்.

வைணவ பக்தி இலக்கியம் தமிழின் மொழியழகை, இலக்கிய நயங்களை அறிவதற்குரிய அரசப்பெருவழி. கம்பராமாயணம் உள்ளிட்ட பேரிலக்கியங்களுக்குள் நுழைவதற்கான வழியும்கூட. அதற்கப்பால் , அது ஒரு மகத்தான ஆன்மிகக்கல்வி. மானுட உணர்வு நிலைகளின் உச்சங்கள் வழியாக தத்துவத்தை, மெய்யியலைச் சென்று தொடுவது அப்பயணம்.

மரபிலக்கியத்தை எளிதாக, நேரடியாகப் பயிலமுடியாது. பொருளுணர்வது கடினம். அதைவிட உளநிலை அமைவது கடினம். உரிய ஆசிரியரிடமிருந்து கற்பதென்பது ஒரு பெருந்தொடக்கம்

நாள் December 13 -14 -15 )

 

மேலைத்தத்துவம்  

அஜிதன் நடத்திய மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு ஒருமுறை நிகழ்ந்துள்ளது.  கலந்துகொண்டவர்கள் தத்துவம் அளிக்கும் கற்றல் அனுபவம் என்ன என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள். நவீன வாழ்க்கை, நவீன அறிவியல் அனைத்தைப்பற்றியும் சிந்தனையில் ஒரு தொடக்கம் நிகழ்ந்ததாக எழுதியிருந்தனர். இன்றைய நவீனக்கல்விபெறும் எவரும் அடைந்தே ஆகவேண்டிய முழுமையான பயிற்சி இது.

இது முன்பு நிகழ்ந்த வகுப்பின் மறுநிகழ்வு. புதியவர்களுக்கானது.  இதில் மேலைத்தத்துவம் ஒட்டுமொத்தமாகவும், அதன் அடிப்படையான நவீன ஜெர்மானிய தத்துவம் (காண்ட், ஹெகல்.ஷோப்பனோவர், நீட்சே) முதன்மையாகவும் கற்பிக்கப்படும்.

டிசம்பர் 27,28 மற்றும் 29 அன்று நிகழும்.

 

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2024 22:02
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.