அறியாத ரகசியம்

அப்துல் ரஹீம்

உங்களுடைய ஞாபகக் கல் என்ற சிறுகதையை படித்தேன். இந்தச் சிறுகதை பகலின் சிறகுகள் தொகுப்பில் உள்ளது.

அந்த அனுபவத்திலிருந்து சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக அந்த அம்மா கல்லோடு உரையாடுவது. ஒரு மிகப்பெரிய அதிசயத்தை அவருடைய குடும்பம் சாதாரணமாகக் கையாள்வது . நான் ஒரு விஞ்ஞானி என்று சொன்னாலும் தத்துவத்தின் வழியே ஆன்மீகத்தின் வழியே அந்த அதிசயத்தை நிகழ்த்துவது. பகல் பொழுதுகளை அவள் கோர்க்கும் மலர்களாக உருவகிப்பதும் , ஆகாயம் போல ஆளுமை கொண்ட அவளைக் காலமும் சமூகமும் ஒரு வீட்டின் கூரையாக மாற்றுவதையும் நீங்கள் குறிப்பிட்டது அழகாக இருந்தது.

கதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கதையின் கடைசி வரி “அந்தப் பெயரை உலகம் அறியாமல் எனக்குள்ளாக வைத்துக் கொள்ளவேண்டும என்று ஏனோ தோன்றியது.”. அவளது மகன் அத்தனை தேடல்களுக்கும் உணர்வுப் பயணங்களுக்கும் பின் அடைந்த இந்த இடத்தைத் தான் அவனது அம்மாவும் அடைத்திருப்பாள் . கடைசிவரை பத்மலட்சுமி ஒரு அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகசியம் தான்.

இன்னும் என்னன்னவோ தோன்றுகிறது ஆனால் வார்த்தைப்படுத்த முடியவில்லை.நன்றி.

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2024 04:15
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.