குலேப் என்ற மலர்

குலேபகாவலி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். குலேப் என்ற மலரை தேடி பகாவலி நாட்டிற்கு மேற்கொள்ளும் இளவரசனின் சாகசபயணமே படம். அந்த மலரைக் கொண்டு வந்தால் மட்டுமே தந்தையின் பார்வையை மீட்க முடியும்.

இளவரசன் தாசன் குலேப் மலரைத்தேடி செல்லும் வழியில் சூதாடி இளவரசர்களை அடிமைப்படுத்தும் லக்பேஷா என்ற இளம்பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டு தந்திரமாக அவளை வெல்கிறான்

குலேப் என்ற சொல் படம் பார்த்து முடித்த நிமிஷத்திலிருந்து மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. கண்பார்வையை மீட்கும் மாயமலரது. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் இது போலக் கண் பார்வை குறைபாடுகளைச் சரிசெய்யக் கண்மலர் வாங்கிச் செலுத்துவார்கள். கோவில் முன்பாக நிறையக் கண்மலர்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன்

ஆயிரத்து ஒரு அராபிய இரவுக்கதையில் ஒன்று குல்-இ-பகவாலி என்ற தான் இக்கதை. இது பஞ்சாபியில் முதலில் படமாக்கபட்டது. பின்பு தமிழ் தெலுங்கு இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் வெளியாகியுள்ளது

மூலக்கதையைத் தமிழுக்கு ஏற்ப மாற்றியுள்ளது சுவாரஸ்யமானது.

மூன்று வேறுவேறு கதைசரடுகளை ஒன்று சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். குல்-இ-பகவாலி தனக்கு மிகவும் பிடித்தமான கதை என்கிறார் வரலாற்று அறிஞர் ரொமிலா தாபர்

பகாவலி என்று அழைக்கப்படும் தேவதை இளவரசியால் பாதுகாக்கப்படும் அபூர்வ மலரைத் தேடி இளவரசன் செல்வதே மூலக்கதை

பெர்சியக் கதை ஒன்று தமிழில் வெற்றிகரமான திரைப்படமாக மாறியது வியப்பளிக்கிறது. டி.ஆர். ராமண்ணா மூன்று அரேபியக் கதைகளைப் படமாக்கியிருக்கிறார். அந்த ஆர்வம் எப்படி உருவானது என்று தெரியவில்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2024 20:57
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.