நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் பிளாக்காயன். நல்ல நெட்டை. “வட்டிக்காரன் அனுப்பிச்சானா?” எனக் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். அந்தப் பிரம்பு நாற்காலியே சாய்ந்து படுப்பதற்கு வாகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வாசலில் பாதியை மறைத்துக் கொண்டு நின்ற சிறுவனைக் கடந்து உள்ளே சென்றபோது ஆசுவாசமாக உணர்ந்தேன். தம்பியின் கைகள் வியர்த்திருந்தன. குளிர்ந்த தரையில் அவரருகில் அமர்ந்து கொண்டோம். அந்தச் சிறுவன் அவரது மகனாக இருக்க வேண்டும். பிளாக்காயனின் காலடியில் சென்று அமர்ந்து கொண்டான். பிளாக்காயன் அவனைப் பொருட்படுத்தாதவர் போல எரிச்சலாக முகத்தை வைத்திருந்தார். நாங்கள் வந்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது போன்ற பார்வை.
வேம்படியான்
The post வேம்படியான் – ம. நவீன் first appeared on அகரமுதல்வன்.
Published on July 27, 2024 11:20