கவிதை 81

 

அவன் சிறுவனாக இருந்தபோதுஅந்தச் செடியை சுமந்தபடியே அலைந்ததையாரும் எதுவும் சொல்லவில்லை என்பதோடுகொண்டாடவுமே செய்தனர்அவன் வளர வளரஅந்தச் செடியும் வளர்ந்ததுஅவன் இளைஞனானபோதுஅதுவும்கவாத்து செய்யப்படாதஒரு இளைய மரமாய் வளர்ந்திருந்ததுஇப்போதுஅவன் அந்த மரத்தை சுமந்தலைவதுஏனோஅவன் அம்மாவை கொஞ்சம் உறுத்தியதுவேண்டாமென்றாள்அம்மாவை உதறினான்அதையே சொன்ன அப்பாவையும்உதறினான்முகம் சுளித்த மனைவியைவிலகினான்ஒருநாள்அதைக் கொஞ்சம்இறக்கி வைக்கலாமா என்று அவனுக்கே யோசனை வந்தபோதுதான்அவன்தானந்த மரமாகவே மாறியிருந்ததைஉணரத் தலைபட்டான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2024 10:46
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.