அடிவான காலடிகள்

01

நீங்கள் நம்பாத போதும்

நீராலானது என் பாதை

தீயாலானது என் பயணம்

ஒவ்வொன்றும்

இவ்வாறே

துடித்து வியக்கும்

திகைத்து நிலைக்கும்

அடிவானத்துக் காலடிகள்

எனது.

02

இந்தப் பெருவெளியில்

என் கவிதையை மொய்த்திருக்கும்

எறும்புகளின் தொகை

எண்ணமுடியாதது

ஒரு தெய்வீகப் பவனியில்

கரைந்த துயரைப் போல

தடங்களின் மீது

கவிதை இனித்து நீண்டிருக்கிறது

எறும்பின் கால்களுக்கு கீழே

இனிமை ஊறி நிற்கிறது.

03

என்றும் அப்படித்தான் நடக்கிறது

இன்றும் அப்படி நடந்திருக்கலாம்

உன் ஊற்றின் மகரந்தத்தில்

பாவி நின்ற ஷணம்

சூறை ஏன் வந்தது?

 

The post அடிவான காலடிகள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2024 10:56
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.