01
இதுவொரு
சொல்.
அம்மை
என்றால்
சொல் மட்டுமா?
சொல்.
02
இலையுதிரும்
பூங்காவில்
உறங்குபவனுக்கு
கால் நீட்டி
ஆசுவாசம் காண
அந்தக் கல்லிருக்கை போதவில்லை.
ஆனாலும்
அவன் தலைமாட்டில்
அமர்ந்திருக்கிறது
அந்த
நாய்.
03
மேலும்
கீழுமாய்
அசைய
அமர்ந்திருக்கும்
குழந்தைக்கு
வானமுமில்லை
நிலமுமில்லை
அக்கணம்
எல்லாமும்
ஊஞ்சல்.
04
இன்றெனது வாசலில்
இரந்து நின்றாள் ஒளவையொருத்தி
அவளுக்கு ஈய
என்னிடம்
சிறிய கள்ளும் இல்லை
பெரிய கள்ளும் இல்லை.
“எத்திசை சென்றினும் அத்திசை சோறு” என்றவளே
இத்திசையில் சோறு இல்லை
சென்று வருக
என்றுதான் சொன்னதாய் ஞாபகம்.
The post அம்மை first appeared on அகரமுதல்வன்.
Published on June 15, 2024 10:36