01
எத்தனை நாட்களுக்கு
இதே கிளையிலிருப்பாய்
உன் ஒவ்வொரு கூவுதலுக்கும்
எவ்வளவோ மரங்கள் துளிர்த்துவிட்டன.
எவ்வளவோ மலர்கள் மலர்ந்துவிட்டன.
இனிமேலேனும்
உன் கூவுதலில்
கொஞ்சமேனும் இன்பம் ஏற்றேன்
செல்லக் குயிலே!
02
நகரப் பூங்காவில்
தியானம் கலைந்ததும் கண்களைத் திறந்து
வானத்தைப் பார்க்குமொருவனை
இன்று அருளியது எனக்கு.
அவனது கண்களில்
ஒளியுமில்லை
அமைதியுமில்லை
பழுத்து உதிர்ந்த ஒரு இலையை
ஏந்திய
குழந்தைக்கு வாய்த்தது
ஒளியும்
அமைதியும்.
03
மழை நின்றுவிட்டது
கொஞ்சம் வெளியே வந்து உலர்த்திக்கொள்
ஈரம் நல்லது.
அப்படியே இருக்க விடு.
The post கூவு குயிலே first appeared on அகரமுதல்வன்.
Published on June 11, 2024 10:29