அபாய வீரன்
ராஜ்

குழந்தைகளுக்கான கதைகளை விளையாட்டு வடிவத்தில் நீங்கள் வடிவமைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாங்கி அதை என் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். கூடவே பகடையும். மகிழ்ச்சியுடன் அவர்கள் நண்பர்களுடன் விளையாடினார்கள். கூடவே என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் குழந்தையாகி போனதில் நான் அடைந்த பேரானந்தத்தை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் நான்கைந்து நாட்களாகச் செல்போன் பற்றிய ஞாபகமே அவர்களுக்குப் பெரிதாக வரவில்லை. புத்தகத்தில் படித்து விளையாடிய அந்த விளையாட்டை வைத்துப் புதிதாக அவர்களாக ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொண்டும் விளையாடுகிறார்கள்.
குறிப்பாகத் தினமும் கதை சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். இதனால் நானும் ஏதாவது தேடிப் பிடித்துப் படிக்க வேண்டியது உள்ளது. முதல் முறை விளையாட்டில் என் மகள் தான் ஜெயித்தாள். அவள் தான் அபாய வீரி .
இது போன்ற கதைகளும் விளையாட்டும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தே ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.
தங்களுக்கும் தங்களின் அபாய வீரன் குழந்தைகள் விளையாட்டு கதைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
