01
தொலைகடல் விளிம்பில்
விழுந்து சிதறும் விண்வீழ் கல்
என்னில் மோதியது
எரிந்த வாழ்வின் சாம்பல் கனத்து
புயலாய் மூடியது
கணத்தில்
என்னை நானே நினைவுகூர்ந்து
செழுஞ்சுடரைத் தீண்டினேன்
மிஞ்சிய நிழலும் உதிர்ந்து
உறக்கம் விழிக்கையில்
இக்கனவு வெந்தது.
02
எனக்கேது இருள்?
கனவுதான்
எனக்கேது கனவு ?
கனவுதான்
03
இலைகளுதிர்ந்த மரத்தின் கிளையில்
கூடு கட்டும் பறவையின் பொருட்டு
துளிர்க்கும்
வசந்தத்தின்
முதல் குருத்து.
The post என்னை first appeared on அகரமுதல்வன்.
Published on May 04, 2024 10:47