நன்றி

மழையில் நனைந்த எனது புத்தகங்களுக்கான சிறப்பு விற்பனைக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி.

திரளாக வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். எனது ஆங்கில நூலிற்கான அறிமுகவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. அபர்ணா கார்த்திகேயன் உரையை முதன்முறையாகக் கேட்கிறேன். அற்புதமாகப் பேசினார். மேனாள் நீதிபதி பிரபாஸ்ரீதேவன் எனது கதைகளின் மொழிபெயர்ப்பு அனுபவங்களை மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருங்கிணைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தின் நுட்பங்கள் குறித்து அவர் கேட்ட கேள்விகள் முக்கியமானவை. அகரனுக்கு எனது அன்பும் நன்றியும்

கதையாகும் மனிதர்கள் என்ற தலைப்பில் எழுத்தாளனின் சவால்கள் குறித்துச் சிறப்புரை ஆற்றினேன். நிகழ்விற்கு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்ற அனைவருக்கும் தேசாந்திரி பதிப்பகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய வாசகர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று நாட்களில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்

தனது சேது பாஸ்கரா கல்வி நிறுவனத்திற்காக மொத்தமாகப் புத்தகங்களை வாங்கி உதவிய டாக்டர் சேது குமணன் அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றி.

டாக்டர் சேது குமணன்

இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து உதவிய இயக்குநர் வசந்தபாலனுக்கு அன்பும் நன்றியும்.

நூலைச் சிறப்பாக வெளியிட்டுள்ள ஓரியண்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்திற்கும் , அதன் ஆசிரியர் மொய்னா, நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.

தேசாந்திரி பதிப்பகத்தின் அன்புகரன். கண்ணகி, சண்முகம், ஹரிபிரசாத், கபிலா காமராஜ், நூல்வனம் மணிகண்டன், எடிட்டர் கௌதம், ஸ்ருதிடிவி கபிலன், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2024 20:38
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.