எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அது என் நண்பகள் பலருக்கும் புரிவதில்லை. ”உங்கள் நாவலை ஒரு லட்சம் கொடுத்து வாங்குகிறார்கள், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். அப்படியும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா?” என்பது அவர்கள் கேள்வி. அப்படி வாங்குபவர்கள் என் வாசகர்கள். தமிழ்ச் சமூகம் அல்ல. தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களைத் தங்கள் எடுபிடிகளாக நினைக்கிறது. பிரபு தேவா என்ற சினிமாக்காரருக்காக ஐயாயிரம் குழந்தைகளை இந்தக் கொடூரமான வெய்யிலில் நிறுத்தி வதைத்திருக்கிறார்கள். ...
Read more
Published on May 03, 2024 05:08