01
எவ்வளவு தூரம்
கிளைத்த நிழல்
நிலத்தில்
மாய்கிறது.
02
என் கண்ணீரை
என் கேவலை
என் பாரத்தை
ஏந்தவும்
தாங்கவும்
உள்ளதா
ஒரு சொல்
சொல்.
03
இந்தக் கோடுகளின் நேர்த்தன்மை
என்னையேன் பதற்றமாக்குகின்றது.
இந்த நிலவின் ஒளியூற்றல்
என்னையேன் நடுக்குவிக்கிறது
இந்தப் பாடலின் கடைசி வரி
என்னையேன் தளும்பச் செய்கிறது.
இந்தக் கவிதையின் இந்த ஒழுங்கு
என்னையேன் பின்தொடர்கிறது.
The post சொல் first appeared on அகரமுதல்வன்.
Published on April 23, 2024 10:18