01
காய்ந்த மலரில் பாவும்
வண்ணத்துப்பூச்சி
தேனருந்துமா?
வெயிலருந்துமா?
02
இயேசுவே!
உங்களில்
பாவமில்லாதவன்
முதலாவது
கல்லெறியக் கடவன்
என்றுரைத்தவர் நீரே!
இயேசுவே
நீரே பாவமற்றவன்
நீரே முதற்கல்லை எறியக்கடவன்.
எங்களை மன்னியுங்கள்.
03
தூரத்தில்
நகர்கின்றது காட்சி
தூரத்தில்
படுகின்றது பார்வை
தூரத்தில்
அழிகின்றது தனிமை
தூரத்தில்
துளிர்க்கின்றது துணை.
The post துணை first appeared on அகரமுதல்வன்.
Published on April 08, 2024 10:51