புத்தருடைய இந்தப் பிறவிக்கு முந்தைய மூன்று பிறவிகள் அவருக்கு முந்தைய நிஜ ஆசிரியர்களின் நினைவைக் குறிப்பவை. அம்மூன்று பிறவிகளும் இந்த யுகத்தைச் சேர்ந்ததாக சொல்லப்பட்டாலும், அவர்கள் வெகு காலத்திற்கு முன் பிறந்தவர்கள். பெரும்பாலும் அனைத்து முற்பிறவி புத்தர்களும் ஒரே கோட்பாட்டையே முன்வைக்கின்றனர் என்பது சுவாரஸ்யமானது. அந்தக் கோட்பாடு பிராமணிய பார்வையான வேதத்தின் அபௌருஷ்யம் என்ற கோட்பாட்டை ஒத்தது. அபௌருஷ்யம் என்றால் கேட்கப்பட்டது என்று பொருள், படைக்கப்படாதது, ரிஷிகளால் சிருஷ்டிக்கப்படாதது. ’உண்மையின் காலாதீதமான ஒருமை’ மீதான இந்த நம்பிக்கை இந்திய மரபுகள் பலவற்றில் பகிரப்பட்டிருப்பது மிகமுக்கியமான ஒன்று.
https://www.kurugu.in/2024/01/mahayana.html
The post மகாயானத்தின் துவக்கம் – ஆனந்த குமாரசுவாமி first appeared on அகரமுதல்வன்.
Published on February 28, 2024 09:09