01
ஒளி உண்டாகுக
என்றதும்
பூமியில் உதித்தது
மலர்.
02
குளம் நடுவிலிருக்கும்
அரசமரக் கிளைநுனியில்
சிறுகுதிர்க்கும்
பறவை
நீருக்கு சூரியன்.
03
நிரந்தரத்தின்
மெளனம்
ஒடிந்த
கிளையமர்ந்து
கூவுகிறது
குயில்.
The post நிரந்தர சிறகு first appeared on அகரமுதல்வன்.
Published on February 23, 2024 08:49