வெளிவீதி

01

என் யுகமொரு பூவரசமிலை

சுருட்டி ஊதிக் கெந்தியோடும் காலம்.

02

விதியே, விதியே, தமிழச்சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரையாயோ?

என்றான் பாரதி, என்கிறேன் நான்.

03

போரொழிந்த நிலத்தில் விறகு சேர்த்தாள் அம்மா

அடுப்பின் தீயில் எழுந்தாடும் சிவப்பேது?

குருதியா? நிணமா? நிலமா?

04

எத்தனை தடவையோ பிடித்திழுத்த வடமிது

எத்தனையோ தடவை உருண்ட தேரிது

மிஞ்சி நிற்கிறது வெளிவீதி.

05

காற்றிறங்கும் குடுவைக்குள்

சிறகு முளைக்கும்

கூட்டுப்புழு

காமம்.

 

 

 

 

The post வெளிவீதி first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2024 07:48
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.