நாஞ்சில் நாடன் எனும் கும்பமுனி

மேடை ஏறியதும் கண்டிப்பாக ஒரு பூச்செண்டு தருவார்கள். ஒரு கட்டு சுக்கட்டிக் கீரை தந்தால் அடுத்த நாள் துவரனுக்கு ஆகும். பிறகு அடர் வண்ணத்தில், நீலம், பச்சை, தங்க மஞ்சள், மாரியம்மன் சிவப்பு நிறத்தில் பொன்னாடை ஒன்று போர்த்துவார்கள். அந்தப் பொன்னாடையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? உடுத்துக் குளிக்க இயலாது, சன்னலுக்கு திரை தைக்க உதவாது. மேசை விரிப்பாகப் பயன்படாது.

வேண்டுமானால் தவுல் வாத்தியத்துக்கோ, மிருதங்கத்துக்கோ உறை தைக்க ஆகும். நமக்கு அவை வாசித்துப் பழக்கம் இல்லை. நாலாகப் பொன்னாடையைக் கிழித்து, ஒரு துண்டை எட்டாக மடித்துத் தைத்தால் பாத்திரம் விளக்க ஆகும். பல இடங்களில் இந்த ஆலோசனையை இலவசமாக வழங்கி இருக்கிறேன். மேடைச் சொற்பொழிவாளர்கள் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. மேலும், எழுத்தாளன் பேச்சுக்கு என்ன மரியாதை உண்டு? இதென்ன கேரளமா, கன்னடமா, மராத்தியமா, வங்காளமா?

தாம்பரத்தில் ஒரு புத்தகக் கடை திறந்து வைக்கப் போனேன். என்னை அழைத்திருந்த ஃபாதர் ஜெயபாலன், திறப்பு விழா முடிந்ததும் பாட்டா காலணிகள் கடைக்குக் கூட்டிப் போய் கடுத்த அரக்கு நிறத்தில் மொக்காசின் ஷூ ஒரு ஜோடி வாங்கித் தந்தார். எனக்கு உவப்பாக இருந்தது. இந்தப் பொன்னாடை வாங்கும் விலையில், இரண்டு கிலோ பெரிய வெங்காயம் தந்து உதவலாம். சொன்னால் யார் கேட்கிறார்கள்!

 

The post நாஞ்சில் நாடன் எனும் கும்பமுனி first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2024 07:58
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.