தமிழில் வந்த ரஸ்கின் பாண்டும் ஜெயகாந்தனின் ஹென்றியும்

பொங்கல் நீள்விடுமுறை தொடங்கிய ஜனவரி 13, சனிக்கிழமை அன்று சென்னை புத்தகக் காட்சி 2024-இல் இரண்டு நூல்களை வெளியிட வாய்ப்புக் கிடைத்தது.

அவற்றில் ஒன்று இந்தோ ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு.

சரளமான மொழிபெயர்ப்பு.

//தேவதாரு மரங்களுக்கு மறுபுறத்தில் வசித்த திருமணமாகாத ஆங்கிலோ இந்திய மூதாட்டிகளிடம் பூனைகள் மட்டும் இருந்தன. திருமணமாகாத பெண்கள் என்றால் அவர்கள் ஏன் பூனைகளை மட்டும் வளர்க்கிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே புரியாத புதிர்தான்

//
மொழிபெயர்ப்பாளர் ஒரு பார்வைக்கு ஜெயகாந்தனின் ’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலின் கதாநாயகன் ஹென்றி போல ஓங்குதாங்காக இருந்தார்.

நானும் நண்பர்களும் , எப்போதாவது அந்த நாவலைப் படமாக்கினால், எழுத்தாளர் திலீப்குமாரைத்தான் ஹென்றியாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஏக மனதாக கருத்து தெரிவித்து வந்தோம்.

திலீப்புக்கும் அவரைப் பரிந்துரைத்த எங்களுக்கும் வயதாகி விட்டது.

இந்த மொழிபெயர்ப்பாளரை ஹென்றி ஆக்கினால் என்ன? இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.

திரை இசைப் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தான் அவர்.

ரஸ்கின் பாண்ட் சிறுகதைத் தொகுதி வெளியீடு

சென்னை புத்தகக் காட்சி 2024

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு
(ஸ்டால் 598 சி)

படத்தில் : முதல் பிரதி பெற்றுக்கொண்ட பெருந்தேவி, மொழிபெயர்ப்பாளர் ஹரிஷ் ராகவேந்திரா மற்றும், வெளியிட்ட இரா.முருகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2024 18:45
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.