தருணாதித்தன் எழுப்பிய ’மாயக் குரல்’ ரசமுள்ளது

போகிக்கு முந்திய சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சியில் நான் பங்கு பெற்ற இன்னொரு நூல் வெளியீடு, நண்பர் தருணாதித்தனின் ’மாயக்குரல்’ சிறுகதைத் தொகுப்புக்கானது.

மேநாள் ISRO விஞ்ஞானியான தருணாதித்தன் பன்னாட்டு எலக்ட்ரானிக் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக அடுத்துப் பணிபுரிந்தவர்.

ஸ்ரீகிருஷ்ணன் என்று அசல் பெயர் – ஸ்ரீக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே ஸ்பேஸ் விடாமல் ஸ்ரீகிருஷ்ணன் என்று சேர்த்துப் பெயரைச் சொன்னதால் பிணரயி விஜயன் நிர்வகிக்கும் பூமியைச் சேர்ந்தவராக இருக்கும் என்று நினைத்தேன். நற்றமிழராம்.

சொல்வனம் டிஜிட்டல் இலக்கிய இதழில் அவர் எழுதிய ‘ரசம்’ சிறுகதை மூலம் பரவலாகக் கவன ஈர்ப்பு செய்து தருணாதித்தன் இலக்கிய உலகில் நுழைந்தது சற்றே தாமதமாகத்தான்.

’மாயக்குரல்’ சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரையில் நான் எழுதியிருக்கிறேன் –

//“காலம், இடம், கதாபாத்திரங்களை நுணுக்கமாகச் சித்தரித்தால், பாதிக் கதை எழுதிய மாதிரி.மனதுக்குள் புன்சிரிக்க வைக்கும் கதாபாத்திரங்களும் சுவாரசியமான திருப்பங்களும் தருணாதித்தனின் கதையுலகில் உயிர்த்தெழுந்து வருகிறார்கள்.”

“இந்தப் பதினைந்து கதையும் காத்திரமானவை. சுநாதமானவை. எங்கேயும் சுவரம் திரிந்து போவதில்லை என்பதே தருணாதித்தனின் தேர்ந்த கதையாற்றலுக்குச் சாட்சி. ஒற்றை இருப்பில் வாசித்து முடித்து மனதில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இருப்பவை. விரைவில் தருணாதித்தனின் அடுத்த தொகுதியை எதிர்பார்க்கிறேன்”

மாயக்குரல் சிறுகதைத் தொகுப்பு ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க் பதிப்பு. சுருக்கமான ஒரு நிகழ்வில் சென்னை புத்தகக் காட்சி 2024இல் – ஸ்டால் எண் 598 சி – நான் வெளியிட திருமதி தருணாதித்தன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

[image error]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2024 19:33
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.