பௌத்தம் கடிதங்கள்
வணக்கம் ஜெயமோகன் சார்
உங்களின் பௌத்தமும் அகிம்சையும் என்கிற அற்புதமான கட்டுரையை படித்து உள்வாங்கினேன். மிகப்பெரிய விவரத்தை இவ்வளவு எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. சமணத்தப்பற்றியும் சொல்லுங்களேன். சமணம் இந்து மத்த்தோடு சேர்த்தியில்லையா? சமணத்தில் வர்க்கப்பிரிவுகள் இல்லையா? தமிழில் சமணர்களின் பங்களிப்பு என்னென்ன? சமண மத்த்தைப்பற்றி நினைக்கையில், பெரியபுராணத்தில் நாயன்மார்கள் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகளே நிழலாடுகின்றன. யார் சமணர்கள்?
நன்றி சார்
ஸ்ரீவிஜி
மலேசியா.
அன்புள்ள விஜயலட்சுமி
நன்றி
சமணத்தைப்பற்றி முன்னரே கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
சமணம் சாதிகள் -
தீபாவளியும் சமணமும்
தமிழ்ச்சமணம்
சமணார் கழுவேற்றம்
ஜெயமோகன்,
பெளத்த மதம் பற்றி தங்கள் கட்டுரை அருமை.இரு வேறு பெளத்த நாடுகளில் (தாய்லாந்து,வியட்நாம்) வாழ்ந்த நான் ,முதலில் குழப்பமடைந்தேன்.பிறகு அம்மக்களுடன் பழகி தெளிவடைந்தேன்.எனக்கு ஒரு முழு புத்தகம் எழுத ஆசை.நேரம் கூடி வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
உங்களின் தெளிவும்,படிப்பறிவும்,சமநிலை நோக்கும் என்னை அதிசயிக்க வைக்கிறது.
புத்தர் முதலில் சமண மதத்தை பின்பற்றினார் என்று நான் சொன்ன பொது பலர் மறுத்து பேசினார்.இப்பொழுது உங்கள் கட்டுரை என் கருத்துக்கள் சரிதான் என்று தெளிவாகியுள்ளது.
நான் எந்த மாதிரி எழுத்தாளனாக விரும்பினேனோ அதுவாக நீங்கள் ஆகியுள்ளது எனக்கு பொறாமை இல்லை ,சந்தோஷத்தையே தருகின்றது.
Regards
கோபாலகிருஷ்ணன் சுந்தரராமன்
அன்புள்ள கோபால்
உண்மையில் வடகிழக்குக்குச் செல்லும் எவருக்கும் பௌத்தம் பற்றிய இந்த ஐயம் எழும். வடகிழக்கின் வரலாறு தெரிந்ததுமே அந்த ஐயம் அகலும். வடகிழக்கில் பௌத்தம் சென்ற இடங்களில் மட்டுமே இன்று அமைதி உள்ளது- மிசோரம் பூட்டான் போல. பௌத்தம் அகன்ற இடங்களில் மீண்டும் வன்முறை உருவாகிறது.
நன்றி
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
