நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். தற்காலிகமாகப் புத்தகங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளோம்.
ஈரமான புத்தகங்களை உலர்த்தும் பணி நடக்கிறது. இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொள்வதாகப் பல்வேறு நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய அமைப்பினர், பள்ளி நிர்வாகிகள் முன்வந்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.
மழைக்குள்ளாகப் புத்தகங்களைக் காப்பாற்ற துணை நின்ற நண்பர்களுக்குத் தீராத நன்றிகள். எனது நிலையைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்லியும் உதவிகள் புரிந்தும் வரும் வாசகர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
நீளும் நட்புக்கரங்களே என்னை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. இத்தனை ஆண்டுகாலம் நான் எழுதிச் சம்பாதித்திருப்பது இந்த அன்பைத் தான். இது போதும் எனக்கு.
Published on December 06, 2023 22:35