ஆங்கிலப் பேராசிரியரான திலா வர்கீஸ் கனடாவில் வசிக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தற்போது காலித் ஹுசைனியின் கவிதைத் தொகுப்பை கடல் பிரார்த்தனை எனத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் வாழ்வை மையமாக கொண்டு எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள்
தந்தை மகனுக்கு எழுதிய கடிதமாக விரியும் இக்கவிதைகள் சமகாலப் பிரச்சனையைத் தொட்டு அகதி வாழ்வின் துயரைப் பேசுகின்றன.
அழகிய வண்ண ஒவியங்களுடன் இதனை மிகநேர்த்தியாக எதிர்வெளியீடு பதிப்பித்துள்ளார்கள்.
கவிதைகளை மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் மொழியாக்கம் செய்துள்ள திலா வர்கீஸிற்கு எனது வாழ்த்துகள்
Published on August 14, 2023 21:39