ருகெண்டாஸின் ஓவியங்கள்

An Episode in the Life of a Landscape Painter என்றொரு நாவலை அர்ஜென்டின எழுத்தாளர் செசர் ஐரா எழுதியிருக்கிறார். ஜெர்மானிய ஓவியரான ஜோஹன் மோரித் ருகெண்டாஸ் வாழ்க்கையினையும் செவ்விந்தியர்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல். ரொபெர்த்தோ பொலான்யோ இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் ஐராவை நிகரற்ற நாவலாசிரியர் என்று கொண்டாடுகிறார். அது உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணர்ந்தேன்

ருகெண்டாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவ்விந்தியர்களை தேடிச் சென்று படம் வரைந்திருக்கிறார். குதிரையில் செல்லும் போது மின்னல் தாக்கி விழுந்திருக்கிறார். யாரும் அறிந்திராத உலகை வரையச் சென்ற அவரது தேடல் விசித்திரமாக நாவலில் விவரிக்கபடுகிறது.

rather than isolating images and treating them as “emblems” of knowledge, his aim was to accumulate and coordinate them within a broad framework, for which landscape provided the model. என்கிறார் ஐரா.

ருகெண்டாஸின் ஓவியங்களை நேரிலே பார்த்திருக்கிறேன். பிரேசிலின் நிலக்காட்சிகள் மற்றும் பூர்வ குடிகளின் வாழ்க்கையை ருகெண்டாஸ் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

1822 முதல் 1825 வரையிலான காலகட்டத்தில் பிரேசில் முழுவதும் பயணம் செய்து  அங்குள்ள கறுப்பின மக்களையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் வரைந்திருக்கிறார்.

ருகெண்டாஸின் நிலப்பரப்பு ஓவியங்களின் தனிச்சிறப்பு வண்ணங்களை அவர் பயன்படுத்தும் விதமாகும். பிரேசிலின் இயற்கைக் காட்சிகள் மர்மமான வசீகரத்துடன் தோற்றமளிக்கின்றன. திருவிழா, வேட்டை, நடனம் என அவர் பூர்வ குடிகளின் வாழ்க்கையைச் சிறப்பாக வரைந்திருக்கிறார்.

The Dance  என்ற ஓவியத்தினை ஆழ்ந்து அவதானிக்கும் போது அந்த இசையை நம்மால் கேட்க முடியும்.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2023 01:55
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.