புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 98
எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்


28 மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கில் உரையாற்றினேன். திரளான கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள்.


புத்தகக் கண்காட்சிக்கு உரையாற்ற வருபவர்களை எப்படி கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்கு புதுக்கோட்டை ஒரு முன்மாதிரி. தங்கும் அறை, உணவு, பயண ஏற்பாடு என அத்தனையும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை சிறப்பாக ஒருங்கிணைக்கும் நண்பர், கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்
Published on July 30, 2023 06:19