நான் இலங்கைக்கு வந்ததிலிருந்தே என்னை நக்கல் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்னை இலங்கைக்கு வரவழைத்த றியாஸ் குரானா. நேற்று அவர் என்னைச் சந்தித்தபோது எனக்கு உயிராபத்து இல்லை. இன்றுதான் வந்தது. அதுவும் றியாஸின் நண்பர் அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ். அவருக்கும் உயிராபத்து. மிகவும் நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் அவர் எனக்கு அந்த வாய்ஸ் மெஸேஜை அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து விட்டுத்தான் இங்கேயிருந்து தப்பி விடலாம் என்று முடிவு செய்தேன். இங்கே அனாதையாக செத்தால் என்ன செய்வது என்று எழுதியிருந்தேன் அல்லவா? ...
Read more
Published on May 09, 2023 04:56