நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யும் உலகப் புத்தக தினமும்

நாளை, ஏப்ரல் 23 2023 உலகப் புத்தக தினம். வாசிப்பில் ஈடுபாட்டை மீண்டெடுக்க நல்ல நூல்களை எழுதியும், வெளியிட்டும், படித்தும், புத்தகங்கள் பற்றிப் பேசியும், கேட்டும், வாசக அனுபவத்தைத் தனித்திருந்து நுகர்ந்தும், கூடியிருந்து குழாத்தில் பகிர்ந்தும் புத்தக தினம் சிறக்கட்டும்.

புத்தக தின வெளியீடாக என் அடுத்த நாவல் ’தினை அல்லது சஞ்சீவனி’ வெளிவர உத்தேசித்தது, நேர்த்தியான கெட்டி அட்டையோடு தமிழில் முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக வெளியிட முடிவு செய்ததால் அதற்கான நேரம் எடுக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் புத்தகம் நம் கைகளில் இருக்கும்.

உலகப் புத்தக தின வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2023 20:15
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.