உலகப் புத்தக தினவிழாவினை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை, பொதுநூலகம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் பதினெட்டு நூலகங்களில் கூட்டங்கள் நடத்துகிறார்கள். இதில் நூறு பேர் உரையாற்றுகிறார்கள். புத்தக தினத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவது பாராட்டிற்குரியது. நூலகங்களைப் பண்பாட்டு மையங்களாக மாற்றும் இந்தச் செயல்பாடு முன்னோடியானது.
சென்னை தேவநேய பாவாணர் மாவட்ட மையநூலகத்தில் முழு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது
இதில் நான் கலந்து கொண்டு உலகின் முதற்புத்தகம் என்ற தலைப்பில் நிறைவுரை ஆற்றுகிறேன். நேரம் மாலை 5 மணி.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
Published on April 21, 2023 20:29