“குமரித்துறைவி” அன்பளிப்பு விழா, ஜெ பிறந்த நாள் விழா

அன்பிற்கினிய ஜெ,

வணக்கம், நலம், நலம்சூழ வேண்டுகிறேன் உங்களுக்கு எங்கள் குடும்பத்தார் அனைவரின் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாளில் உங்கள் ஆசியை வேண்டுகிறேன்.

புதுவை வெண்முரசு கூடுகை கடந்த ஒரு ஆண்டு முழுவதும் ஜெ 60 சிறப்பு ஆண்டாக கொண்டாடியது. ஆண்டு முழுமையடையும் அந்த நாளில் என் தங்கை கலைவாணி@செல்வி அழகானந்தம் ஆகியோரின் மகளுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. (21.04.2023 – 23.04.2023) மூன்று நாள் நிகழ்வாக ஒருங்கி இருக்கிறது ஒரு நல்லூழ். அதில் 22.04.2023 அன்று மாலை 6:00 மணிக்கு ஒரு சிறு கலாச்சார விழவாக உங்கள் பிறந்த நாள் கொண்டாட்டம்  திட்டமிடப்பட்டுள்ளது. நண்பர் கடலூர் சீனு உங்களின் “ குமரித்துறைவி” நூலை அறிமுக படுத்தியும், நவீன இலக்கியம் குறித்தும் சிறு உரை நிகழ்த்த இருகிறார். அதைத் தொடர்ந்து “குமரித்துறைவி” நூல் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவதுடன் அந்நிகழ்வு நிறைவடைகிறது.

இதில் மகிழ்வென நான் உணர்வது “குமரித்துறைவி” நாவல் துவக்கமான “சித்திரை வளர்பிறை நான்காம் நாள் இன்று” எனத் தொடங்குகிறது. புத்தகம் மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் அனைவருக்கும் அன்பளிப்பாக அளிக்கப்பட இருக்கிறது.

குமரித்துறைவி படித்த வேகத்தில் ஓராண்டிற்கு முன்பு கோர்வை இல்லாத உணர்சிகரமான கடிதம் எழுதியிருந்ததை இப்போது நினைவுறுகிறேன். இரண்டு முறை வாசித்த பிறகும் அந்த உணர்ச்சிநிலை அப்படியே நீடிக்கிறது. அது ஏன் என கேட்டுக் கொண்டதுண்டு. இரு காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்று உதயன் செண்பகராமனுடன் என்னை மிக இணக்கமாக உருவகித்துக் கொண்டது. நான் அதுபோல முன்னெடுத்த அத்தனை இயக்கத்திலும் (அரசியல், ஆன்மீகம், இலக்கியம்) அது போல ஒன்றை தொடர்ந்து செய்து சிலரின் கடும் வெறுப்பினால் அலைக்கழிக்கப்பட்டாலும் அந்த செயல்பாடுகள் வழியாக இறுதியில் நான் கண்டடைந்தது என்னை. பாதுகாக்கப்பட்டதாக தனது அரண்மனையில் சென்றமர்வதுடன் அந்த நாவல் முடிவிடைகிறது. இத்தனை செயல்களின் முரணியகத்தின் பின்னும  அவனுக்கு அது தேவைப்படவில்லை என்பது எனது உணர்வெழுச்சியை உருவாக்கியது.

இரண்டு நான் அந்த மாபெரும் அமைப்புகளை உருவாக்கி அதன் வெற்றியை உணர்ந்து தருக்கி நின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அடைந்த “கர்வபங்கம்”. அது கண்ணீரல்லாமல் படிக்க என்னை முடியமலாக்கியது.

அந்த நாவல் படித்த பிறகு எதாவது செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன் இதைவிட சிறப்பான தருணம் மறுமுறை வாய்க்காது. நன்றி. என் ஆசிரியரென விழவிற்கு உங்கள் ஆசியை வேண்டுகிறேன். சரியான நேரத்தில் புத்தகங்களை அனுப்பி உதவிய மீணாம்பிகைக்கும் எனது நன்றிகள்.

நன்றி
ஆழ்ந்த நட்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2023 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.