குவைத்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ.

வளைகுடாப்பயணம் படித்து மகிழ்கின்றேன்.

திரு.சித்தநாதபூபதி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

அவர் வெண்பாவுக்கு ஒரு நிரல் எழுதிய பெருமைக்குரியவர்.

அமெரிக்காவில் கண்டு உரையாடினேன். அவர் ஒரு பொறியாளர்.

தமிழ் வெண்பா இலக்கணத்தை உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக நிரல் உருவாக்கியிருந்தார்.

அப்பொழுதே நான் பாராட்டி என் பக்கத்தில் எழுதினேன். அவர் அங்குதான் இருக்கின்றார் என்பது அறிந்து மகிழ்ச்சி.

அவர் இல்லத்தில் விருந்துண்டமை சிறப்பு.

அனைவருக்கும் என் அன்பு.

பயணம் சிறக்கட்டும்.


மு. இளங்கோவன்


*


வணக்கம் ஜெமோ


நலமா? எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? ப்ரார்த்தனைகள்.


நல்லபடியாக ஊர் போய் சேர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். கடைசி நாளன்று வழியனுப்ப வர இயலவில்லை. திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் நலமாக ஊர் சேர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். குவைத் பயணம் உங்களுக்கு புது அனுபவமாக இருந்திருக்கும். உங்களை சந்தித்தது எனக்கும் ஒரு நல்அனுபவம்.


நன்றி


செளரிராஜப்பெருமாள் எனும் பாம்பாட்டிச்சித்தன்


அன்புள்ள பாம்பாட்டிச்சித்தன்


நலம்தானே?


நானும் நலம். உங்களை அங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கே வரும்போது பார்ப்போம். நீங்கள் நவீனக்கவிதை எழுதுபவர் என்று தெரியும். ஆனால் மரபுக்கவிதையை- கம்பராமாயணத்தை- அன்று நீங்கள் கூறியது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளித்தது


பார்ப்போம்


ஜெ


அன்புள்ள ஜெயமோகன் சார்,

வணக்கம். பெட்டிகள் சேதாரமும், பெரிய செலவும் இன்றி வந்தடைந்ததில் ஒரு ஆசுவாசம். அதுவரை சங்கடமாகத்தான் இருந்தது. வீண் அலைச்சல்தான். வருத்தம். பேசிப் புலம்பிக்கொண்டோம். ( நினைவுப் பரிசு மாத்திரம் உங்கள் கையோடு வந்ததில் ஏதோ irony இருப்பதாகப் படுகிறது).

ஒரு ஆயுசுக்குப் பேசித்தீராத விஷயங்களை 2, 3 நாட்களில் தீர்த்து விடமுடியுமா என்ன.

நீங்கள் புறப்பட்டுப் போனபின்னரும் மனது உங்களுடன் ஏதோ உரையாடலிலும், பொங்கும் சம்பாஷணைகளிலும். எனக்கு மட்டுமல்ல, ஏறத்தாழ அனைவருக்கும் இதே நிலைதான். சரயுவின் இக்கரையிலேயே விடப்பட்ட ஜனங்கள்.

குடும்பத்தாருக்கு எங்கள் அன்பு.

பிரியங்களுடன்,

ஜெயகாந்த்.


அன்புள்ள ஜெயகாந்தன்


நலம்தானே? நானும் நலம். ‘ஒழிமுறி’ படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறேன். குவைத் நிகழ்ச்சிகளிலேயே முக்கியமானது உங்களைச் சந்தித்ததுதான். மிகுந்த மனநிறைவை அளித்த சந்திப்பு. நம்மிடையே நிறைய ஒத்துப்போகுமென நினைக்கிறேன்


ஆம், பேசிமுடியவில்லைதான். இங்கேவரும்போது மீண்டும் சந்திப்போம்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

அறமெனப்படுவது-கடிதங்கள்
அறமெனப்படுவது யாதெனின்…
வளைகுடாவில்… 4
வளைகுடாவில்… 3
துபாயில்-கடிதம்
வளைகுடாவில்… 2
வளைகுடாவில்… 1
வளைகுடா பயணம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.