தியானப்பயிற்சி, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம் , நலமே வேண்டுகிறேன். எல்லா வகையிலும் என்னை நிலை நிறுத்திக்கொள்ள உங்கள் சொல் கொண்டு அடுத்த 10ஆண்டுக்கான திட்டம் ஒன்றை முடிவு செய்தேன். விரைவில் உங்களிடம் பகிர்கிறேன்.என்னை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்துவதில் சிறு குழப்பம் இருந்தது. உங்கள் தளத்தில் ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்களின் தியான பயிற்சி வகுப்பு பற்றி அறிந்தேன். உங்கள் எல்லோரின் நல்விருப்பம் வாய்ப்பு பெற்று தியான வகுப்பில் கலந்து கொண்டேன்.

இது என் முதல் அனுபவம். தில்லை செந்தில் sir வகுப்புகளை திட்டமிட்டிருந்த விதம் அனைத்து வயதினருக்கும்ஏற்ற கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.முதல்நிலையில் ஆசனங்களை தேர்வு செய்து தொகுப்பாக வழங்கியிருந்தார். இதிலிருந்து அடுத்தடுத்த நிலைக்கான சாத்தியங்களையும் விளக்கினார். பயிற்சிக்கான நேரம் , இடைவேளை, செய்முறை , குறிப்புகள் மற்றும் விளக்கம் வடிவமைத்த வகையில் தில்லை sir ஐ பணிவுடன் வணங்குகிறேன்.3நாட்கள் சிறு புன்னகையுடன் இருந்த முகம் மாறவே இல்லை.குருக்களுக்கு நன்றி சொல்லும் போது நெகிழ்ந்து விட்டார். குருமரபு, யோகமரபு, உடல் மனம் தியானம் கர்மா அக்கணத்தில் வாழ்தல் என பயிற்சி விரிவடைந்த விதம் பெரும் நிறைவு.

ஆசிரியரின் தன்மை, பயிற்சிக்கான இடம் சூழல் ஆகியவை பெரும் ஆசிர்வாதம். பதற்றமான நெருக்கடி நேரத்தில், பெரும் செயல் தொடங்கும் முன் செய்ய வேண்டியதாக சைதன்ய யோகத்தை முக்கியமாக கருதுகிறேன். 3 நாளில் தரிசனமாக அமைந்த நிகழ்வு முதல் 2 நாட்கள் வகுப்பு நடைபெற்ற  ஹாலுக்கு முன்னுள்ள குளம் வறண்டு வெடித்து இருந்தது. 2ம் நாள் நள்ளிரவில் பெய்த மழை மறுநாள் குலத்தின் வெடிப்புகளை நீரால் அநேகமாக நிரப்பியிருந்தது. இந்த நிறைவுடனும் ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடன் பயிற்சியில் ஒவ்வொரு நாளும் அமர்வேன்.யோகம் நிகழும். குளத்தில் நீர் பெருகி அலை ததும்பும். ஹரி ,மணி அண்ணா, உணவளித்த அய்யா மற்றும் மயில்களுக்கு நன்றி.

நன்றி

இப்படிக்கு

மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2023 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.