புத்தகக் கண்காட்சி -2

மூன்று நாட்களாக தினமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தேன். திரளான கூட்டம். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. வெளியூரிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். நேற்று தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு கோணங்கி வந்திருந்தார். அவரது புதிய நாவல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மாலையில் எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் உதயசங்கர், சாரதி ஆகியோரைச் சந்தித்தேன். அன்னம் அகரம் பதிப்பகம் கதிர் ஹெப்சிபா ஜேசுநாதனின் மானீ‘  நாவலின் புதிய பதிப்பு கொண்டு வந்திருக்கிறார். நேற்று அந்த நூலை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். தமிழில் வெளியான சிறந்த நாவல்களில் ஒன்று. நீண்ட இடைவெளிக்குப் பின்பு மறுபதிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்

புத்தக வெளியீட்டு விழா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2023 01:46
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.