சென்ற நூற்றாண்டில் நடந்த ஒரு விவாதம், இன்னிலையா கைந்நிலையா என்பது. வ.உ.சிதம்பரம் பிள்ளை இன்னிலை என்னும் நூலை பதிப்பித்து அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்றார். அனந்தராம ஐயர் கைந்நிலை என்னும் நூலை பதிப்பித்து அதுவே பதினென்கீழ்க்கணக்கு நூல் என்றார். வ.உ.சி பதிப்பித்த நூல் போலியானது, அதை சொர்ணம் பிள்ளை என்பவர் பொய்யாக எழுதி வ.உ.சியிடம் கொடுத்து பெரும்பணம் பெற்றுச் சென்றுவிட்டிருந்தார். வ.உ.சியின் கடைசிக்காலத்தில் மிகுந்த உளச்சோர்வை அளித்த செய்தி இது.
எனக்கு அந்த சொர்ணம்பிள்ளை ஆர்வமூட்டும் நபராக தெரிகிறார். தமிழறிஞர்களையே ஏமாற்றுமளவுக்கு பழந்தமிழ்நூலை எழுதும் ஆற்றல்கொண்டவர் அல்லவா?
இன்னிலை
இன்னிலை – தமிழ் விக்கி
கைந்நிலை
கைந்நிலை – தமிழ் விக்கி
Published on January 07, 2023 10:34