சென்னை இலக்கியத் திருவிழா

நேற்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சென்னை இலக்கியத் திருவிழா சிறப்பாகத் துவங்கியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விழாவைத் துவக்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். விழாவில் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர்கள். சென்னை நகர மேயர், பாடநூல் கழக தலைவர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சென்னை இலக்கியத் திருவிழா ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தார்கள். தமிழக அரசின் சார்பில் இப்படி ஒரு இலக்கியவிழாவை முன்னெடுத்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.

இந்த நிகழ்விற்கு காரணமாக இருந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலகத்துறைக்கும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிகழ்வினைச் சிறப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்திய உதயசந்திரன் ஐஏஎஸ். இளம்பகவத் ஐஏஎஸ், டாக்டர் சங்கர சரவணன், பவா. செல்லத்துரை, ஒளிவண்ணன், மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலக இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள் , ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.

முதல்நிகழ்வில் கலந்து கொண்டு சென்னையும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். நிகழ்வின் அறிமுகவுரையை எழுத்தாளர் அகரமுதல்வன் ஆற்றினார்.

எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், எழுத்தாளர் இமயம், எழுத்தாளர் ராஜன், ஆய்வாளர் ராஜன்குறை, டாக்டர் அரசு, முனைவர் ம. ராஜேந்திரன், ஏ.எஸ்.பன்னீர் செல்வம், திட்டக்குழு தலைவர் ஜெயரஞ்சன், பேராசிரியர் சந்திரசேகர், விழியன். பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன், கவின்மலர், பேரறிவாளன், ஒவியர் பல்லவன். இனியன், என நிறைய நண்பர்களை காணவும் பேசவும் முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.

ஸ்ருதிடிவி கபிலன் இந்த உரையைப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2023 01:15
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.