தத்துவக் கல்வி, கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

சீரான இடைவெளிகளில் என் ஆசிரியர்கள் கனவில் வருகின்றனர். அத்தகைய கனவுகள் மட்டும் ஆண்டுக்கணக்கில் நினைவில் தங்கிவிடுகின்றன. ராமகிருஷ்ணருடன் வாலிபால் விளையாடிய கனவெல்லாம் 15 வருடங்களுக்குப் பின்னும் நினைவிருக்கிறது. குமரித்துறைவி வெளியான அன்றைக்கு முந்தைய இரவு கண்ட கனவில் உங்கள் அருகில் உட்கார்ந்து , நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தத்துவ வகுப்பில் வேதங்கள் குறித்து நீங்கள் பேசிய இரவில் அக்கனவு கிட்டத்தட்ட நிஜமாகிவிட்டது (இடமும், அருகில் இருந்தவர்களும் மட்டும் வேறு).

இன்று காலை வந்த கனவு அதற்கு இணையான உள எழுச்சியை அளித்தது. இரண்டாம் தத்துவ வகுப்பில் நான் கலந்துகொள்வது போன்ற கனவு. பெரிதாக ஒன்றும் நிகழவில்லை. உங்களோடு ஒரு கேள்வி பதில் உரையாடல் தான். அதற்கே மூச்சு வாங்கி எழுந்துவிட்டேன்.

ஒவ்வொரு வகுப்பு முடிந்த பின்பும் எடுத்த குறிப்புகளை மீண்டும் படித்தேன். அடுத்த வகுப்புக்கு முன் படிக்க வேண்டும் என்று சில புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறேன் (இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், சுகுமார் அழிக்கோடின் ‘தத்வமஸி’ மற்றும் சில). இது தவிர தொடக்கநிலை மாணவன் செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்கள் வேறு என்ன?

-பன்னீர் செல்வம்.

*

அன்புள்ள பன்னீர்செல்வம்

கனவு நல்லது. நனவில் பயில்வது ஆழுள்ளத்துக்கு இறங்குகிறது என்பதற்கான சான்று.

ஆனால் தத்துவ வகுப்பின் தொடர்கல்வி என்பது மேலும் நூல்களை வாசிப்பது அல்ல. அவ்வகுப்பில் பயின்றவை ஒரு சொல்லும் மறக்காமலிருக்கும்படி கிட்டத்தட்ட நெட்டுரு போடுவது. கால அட்டவணை, தத்துவப் பரிணாம அட்டவணை, கலைச்சொற்கள் எல்லாம் நினைக்காமலேயே நினைவிலெழவேண்டும். ஒரு சொல் சற்று தாமதமாகுமென்றாலும் தொடர்கல்வி தொடர்சிந்தனை இரண்டும் தடைபடும்

ஜெ

 

—————————————————

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2023 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.