ஒலிப்பதிவுகள் வருவதற்கு முந்தைய இசைக்கலைஞர்கள் ஒருவகையில் துரதிருஷ்டசாலிகள். அவர்களின் இசை கேட்கமுடியாமலேயே காற்றில் மறைந்தது. ஆனால் இன்னொருவகையில் அவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களின் இசையைப் பற்றிய தொன்மங்கள் வாழ்கின்றன. அவற்றினூடாக நாம் ஒரு தேவசங்கீதத்தை கற்பனைசெய்துகொள்கிறோம். கேளாச்சங்கீதமே மேலும் இனிது!
கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்
Published on January 02, 2023 10:34